பெண் பயணிகளிடம் கோபமாக நடந்துக்கொள்ளக்கூடாது..! போக்குவரத்துறை எச்சரிக்கை

சாதாரண பேருந்துகளில் பயணிக்கும் மகளிர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்ளளக்கூடாது என்று ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை நம்பி பெரும்பாலான பயணிகள் உள்ளனர். இந்த சூழலில், சில பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இதுதொடர்பான, அவ்வப்போது சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. குறிப்பாக, சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் மகளிர்களை சில ஓட்டுநர்களும், நடத்துனர்களும் மரியாதைக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் உத்தரவிட்டுள்ளது.

  • ஓட்டுநர்களும், நடத்துநர்களும்  நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும்.
  • பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். 
  • ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும்.  
  • பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது. 
  • நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ள கூடாது.
  • வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். 
  • பேருந்தை பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். 
  • மேலும், பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துனரின் சமிக்ஞை கிடைத்தப்பின் கதவுகளை மூடிய நிலையில் தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும். 
  • அதேபோல், ஓட்டுநர் இடது பக்கவாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் யாரேனும் ஏறுகிறார்களா? அல்லது இறங்குகிறார்களா? என்பதை கவனமாக பார்த்து, அதன் பிறகு தான் பேருந்தை இயக்க வேண்டும்.  
  • மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். 
  • முக்கியமாக, பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை  ஏற்றி செல்ல வேண்டும்.
  • கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. 
  • பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகள் இறங்க தயார் படுத்தவும் வேண்டும். 
  • ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.

இதனை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *