விழுப்புரம்: பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு.. விசாரணை தீவிரம்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தகாத உறவால் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு பிரம்மதேசம் போலீசார் விசாரணை.

விழுப்புரம்:- திண்டிவனம் அருகே தகாத உறவால் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை கல்குவாரி அருகே பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு பிரம்மதேசம் போலீசார் விசாரணை. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நல்முக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி வயது (40), இவருக்கும் சக்கரபாணி என்பவருக்கும் திருமணம் ஆகி 17 வயதில் மகன் ஒருவரும் உள்ளார், இந்த நிலையில் சக்கரபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சாந்தியை விட்டு பிரிந்து சென்றுள்ளார், தனியாக வசித்து வந்த சாந்திக்கு சக்கரபாணியின் உறவினரான செல்வம் என்பவருடன் நீண்ட நாட்களாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த கள்ளத்தொடர்பால் சாந்திக்கு கடந்த 21-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது, பிரசவம் முடித்து நேற்று மருத்துவமனையில் இருந்து சாந்தி வீடு திரும்பியுள்ளார், இதனையடுத்து இன்று காலை குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கிராம செவிலியர் சென்று குழந்தை எங்கு என்று கேட்டபோது சாந்தி குழந்தை இறந்துவிட்டது என முன்னுக்கு பின்னுக்கும் முரணான பதில்களை அளித்துள்ளார், உடனடியாக செவிலியர் கிராம நிர்வாக அலுவலருக்கும், பிரம்மதேசம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரம்மதேசம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை இறந்து விட்டதாகவும் அந்த குழந்தையின் உடலை வடகொளப்பாக்கம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டதாகவும் சாந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வடக்கொளப்பாக்கம் கிராமத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் இருந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை இயற்கை மரணம் அடைந்ததா அல்லது தகாத உறவினால் பிறந்த குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *